search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரங்க பாதை"

    • ஊட்டுவாழ் மடம் கேட் இன்று முதல் 2 நாட்கள் மூடல்
    • ஊட்டுவாழ்மடத்தில் சுமார் ரூ.4.5 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப் பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கிறார்கள்.

    இந்த கிராமங்களில் உள்ளவர்கள் ஊட்டு வாழ்மடம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை கடந்து தான், நாகர்கோவில் வர வேண்டும். ரெயில் நிலையம் அருகில் இருப்பதால், ரெயில்கள் என்ஜின் மாற்றும் போது கூட ரெயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 13 மணி நேரம் இந்த ரெயில்வே கேட் பூட்டியே இருக்கும். இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைந்தனர். எனவே இந்த பகுதியில் சுரங்க நடைப் பாதை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து ஊட்டுவாழ்மடத்தில் சுமார் ரூ.4.5 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் பணிகள் தொடங்கின. முதலில் சுரங்கப்பாதை பணிக்காக ரெயில்வே கேட் 4 மாதங்கள் வரை மூடப்படும் என்றும், மக்கள் மாற்றுபாதையில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    ரெயில்வே கேட்டை மூடினால் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே ஊட்டு வாழ்மடம் ரெயில்வே கேட் அருகிலேயே தற்காலிக பாதை அமைத்து ரெயில்வே கேட் வசதி ஏற்படுத்தி விட்டு, பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஊட்டு வாழ்மடம் ரெயில்வே கேட் அருகிலேயே தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. தற்காலிக பாதையில் தனி யாக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் எல்லாம் முடி வடைந்ததை தொடர்ந்து தற்போது சுரங்கம் அமைக்க மண் தோண்டும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.

    இந்த சுரங்கப்பாதை சுமார் 8 மீட்டர் அகலத்திலும், 4.5 மீட்டர் உயரத்திலும் சுமார் 80 மீட்டர் நீளத்திலும் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

    சுரங்கப்பாதை பணிக் காக இன்றும், நாளையும் தற்காலிக ரெயில்வே கேட்டும் மூடப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப் பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை ரெயில்வே கேட் மூடப் பட்டது. ரெயில்வே கேட் மூடப்பட்டதையடுத்து சுரங்க பாதைக்கான பணி கள் தீவிரப்படுத்தப்பட்டது. சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் 4 தண்ட வாளங்கள் உள்ளது. ஏற்கனவே 3 தண்ட வாளங்களில் கர்டர் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஒரு தண்ட வாளத்தில் கர்டர் பாலம் அமைப்பதற்கான பணிகளை ஊழியர்கள் மேற் கொற்கண்டு வருகிறார்கள். தண்டவா ளங்களையொட்டி உள்ள ஜல்லிகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டு கர்டர் பாலம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    காலை தொடங்கி இரவு பகலாக அந்த பாலப் பணியை 2 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். கர்டர் பாலம் அமைக்கப்பட்ட பிறகு தண்டவாளத்தின் கீழ் பகுதிகளில் மணல்களை எடுத்துவிட்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்படும். கர்டர் பாலம் 4 தண்டவாளங்களி லும் அமைத்துவிட்டால் ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. சுரங்கப்பாதை பணிகளும் தொய்வின்றி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கண்டமங்கலம் ெரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்கள் ஆத்திர மடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வழியாக நாகப் பட்டினம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் ெரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு 2 புறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் நிலையில் 4 வழி சாலையை 2 பகுதிகளிலும் இரும்பு பைப்புகளால் அடைத்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியை பொது மக்கள் கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்வதற்கு சுரங்க வழி பாதை அமைக்ககோரி கண்டமங்கலம் பகுதி பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சக்திவேல் கண்டமங்கலம் பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கண்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் அரசு நிர்ணயித்த அளவுகோல் அடிப்ப டையிலேயே சாலை அமைக்கப்படுகிறது. அதனால் இந்த பகுதிக்கு சுரங்கப்பாதை வழி அமைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் ஆத்திர மடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுரங்க பாதை அமைக்கப்படவில்லை என்றால் தொடர் போரா ட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதனை அடுத்து கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலை மையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    ×